உலக வாழ்த்து   வாழ்க வாழ்க உலகம் எலாம் வாழ்க எங்கள் தேசமும் வாழ்க எங்கள் தமிழகம் வாழ்க எங்கள் மனை அறம் வாழ்க மேழிச் செல்வமே வளர்க நாட்டுக் கைத்தொழில் வாழ்க எங்கள் வாணிபம் வாழ்க நல்ல அரசியல் அன்பு கொண்டு அனைவரும் அச்சம் இன்றி வாழ்கவே துன்பம் ஏதும் இன்றியே துக்கம் யாவும் நீங்கியே இன்பமான யாவும் எய்தி இந்த நாட்டில் யாவரும் தெம்பினோடு தெளிவு பெற்றுத் தேவர் போற்ற வாழ்குவோம்! – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்