புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 8. ஒருமொழி யேனு மினையநாள் காறு முலகெலாந் தேடியு மடையா இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ டெழுதிணை யகம்புற மென்னும் பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப் பொருளிலா ளெனப்புகல் பொய்யர் மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர் மதியினுக் குவமையம் மதியே. 9. பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும் பெரியர்சொற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 3. இனியசெந் தேனு மினியவான் பாலு மினியதீஞ் சுவைநிறைந் தியலும் கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங் கனிவரு முதலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கினிமைநம் பாலிலை யென்று கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக் கைசெயுங் கனிதமிழ் மொழியே. 4. உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக் குழறியுங் குழறியு…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16- 20
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15 தொடர்ச்சி) 16. இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே. 17. பொன்மான மானாலும் பொருண்மான மானாலும் மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும் கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார் தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர். 18. சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந் துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார் இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான் மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10 தொடர்ச்சி) 11. தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும் இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால் பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர். 12. முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார் நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங் கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர். 13. அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக் கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய் அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார் எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர். …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5 தொடர்ச்சி) 6. இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும் பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார் கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர் பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர். 7. நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக் கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும் சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார் இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர். 8. பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும் திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும் வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார் கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார். …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28 தொடர்ச்சி) ஒழுக்கப் படலம் கொச்சகம்