(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால்  15.கற்பு இயல்  கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால், காதலியின் கண்கள் துடித்தல்.   (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,       தாம்காட்ட யாம்கண் டது.         தீராத்துயர் ஆக்கிய கண்களே!         நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்       பைதல் உழப்ப(து) எவன்?         விளைவை ஆராயாமல் கண்டகண்,…