கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10  தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11&12 பதினொன்றாம் பாசுரம் களப்பிரரையும் வென்ற கன்னித்தமிழ்   அளப்பரிய ஒண்புகழால் ஆண்டவன்பொ றாமல் வளப்பமுறு தண்டமிழை வாடச் செய்தானோ? களப்பிரனின் காலத்துக் காரிருள் சூழ்ந்து களிப்பூறும் மாவாழ்வு காணா தொளியப், பளிக்கறைமேல் தூசி வளிவர நீங்கல்போல் ஒளிகுன்றாள் ஆகித், தனைச்செயவே செய்து வெளியார் சமணரையும், பௌத்தரையும் வென்றாள்; எளியாள் தமிழணங்கின் ஏற்றஞ்சொல், எம்பாவாய் !   பன்னிரண்டாம் பாசுரம் பெருமையில் தாழாத தமிழ்   ஒருவானங் கீழே…

நம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்? – கி.வா.சகந்நாதன்

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை….

மழை வேண்டாம்! – கி.வா.சகந்நாதன்

  “மழை வேண்டாம்!” என்று அவர்கள் சொன்னார்கள். ‘இப்படியும் சொல்வார் உண்டோ?’ என்று நமக்குத்தோன்றுகிறது. எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு, “வருமா, வருமா” என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால், நமக்கு வேண்டிய மழை பெய்து, அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு, குளங்களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், “மழையே! மழையே! வா,வா!” என்றா பாடுவோம்? “கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்” என்றுதான் சொல்வோம். மழை பெய்யாமலும்…