பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – 3

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) ஆய்வகம்   ஆய்வகத்தில் எரிவாயு உருளைகள் பயன்படுத்தும்போது மாணவர்கள் அவற்றினைக் கையாளாத வகையில் மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமுள்ள தனி அறையில் வைத்துப் பேண வேண்டும். அவற்றை ஆய்வகத்தில் சேமித்து வைக்க கூடாது. வகுப்பறை   பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் கூர்மையான பொருட்கள் துருப்படித்த ஆணிகள், கம்பு போன்றவை அகற்றப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். விளையாட்டுக்கருவிகள் உடைந்த நிலையில் ஒட்டப்பட்டதாகவும் துருப்பிடித்தும் திருகு கழன்ற நிலையில் உயவு அதாவது லூப்ரிகேசன்…

பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2.

(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) கழிப்பிடங்கள் 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சம், பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே திடலிலோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டட உறுதி மற்றும் உரிமச் சான்றுகளுடன்…

பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் : 01

   ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற தொடருக்கேற்ப தெய்வத்திற்கு முன்னர் குருவை மூன்றாம் இடத்தில் வைத்துப் பண்டைய காலத்தில் குருகுலக்கல்வியிலிருந்து கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் ஆங்கில மோகத்தின் காரணமாக நாம் நம்முடைய குழந்தைகளைப் பதின்நிலைப்பள்ளி(மெட்ரிக்குலேசன்,) மத்தியக்கல்வி வாரியம்(சி.பி.எசு.இ) எனப் பல வகையான பள்ளிகளில் சேர்த்து வருகின்றோம். இதனைப் பயன்படுத்தி பள்ளி – கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை அடிமையாக்கியும், மாணவ, மாணவிகளைக் கொத்தடிமை போலவும்நடத்தி வருகிறார்கள். விளைவு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் பாதி மனநிலை பாதிக்கப்படும் நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளப்படுகிறார்கள். பணங்காய்ச்சி…