திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 14. களவு இயல் அலர் அறிவுறுத்தல்     தலைமக்களின் காதலை, ஊரார்அறிந்து பலவாறு பழிதூற்றல் (01-05 தலைவன் சொல்லியவை) அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப்       பலர்அறியார் பாக்கியத் தால்.        “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது; இதனை, ஊரார் அறியார்”.   மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து),       அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர். “குவளைமலர்க் கண்ணாள் அருமை அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”.   உறாஅதோ ஊர்அறிந்த…

திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் நாணுத் துறவு உரைத்தல்   காதலர் தம்தம் காதல் மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல்   (01-07 தலைவன் சொல்லியவை) 1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம்,      மடல்அல்ல(து) இல்லை வலி.       “காதல் வெல்ல, மடல்குதிரை         ஏறுதல்தான் மிகநல்ல வழி”. நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும்,       நாணினை நீக்கி நிறுத்து.       “காதல்துயர் பொறாத…

திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல்  – தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 113.  காதல் சிறப்பு உரைத்தல் தகுதலைவனும், தலைவியும், தம்தம் மிகுகாதல் சிறப்பை உரைத்தல்.       (01-05 தலைவன் சொல்லியவை) பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி            வால்எயி(று)  ஊறிய நீர்.        “பணிவு மொழியாளின் வாய்ஊறல்,          பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.” உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன,       மடந்தையொ(டு) எம்இடை நட்பு.      “உடம்புக்கும்,…

திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 112.நலம் புனைந்து உரைத்தல்   தலைவியின் நலம்மிகு அழகைத்,  தலைவன்  மகிழ்ந்து பாராட்டியது.         (01-10 தலைவன் சொல்லியவை) “நல்நீரை வாழி, அனிச்சமே! நின்னினும்,       மெல்நீரள் யாம்வீழ் பவள்”.   “மெல்லிய அனிச்சப்பூவே! என்னவள்          மெல்லியவள், உன்னைக் காட்டிலும்”. மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண்,       பலர்காணும் பூஒக்கும் என்று.       “மனமே! இவள்கண், பலர்காணும்…

திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 111. புணர்ச்சி மகிழ்தல் தலைவன் மணந்து, கூடிமகிழ்ந்த இன்பத்தை, எடுத்துக் கூறுதல்.    (01-10 தலைவன் சொல்லியவை) கண்டு,கேட்(டு), உண்(டு),உயிர்த்(து), உற்(று)அறியும் ஐம்புலனும்,       ஒண்தொடி கண்ணே உள.       கண்டு,கேட்டு, உண்டு,முகர்ந்து,      தொடுஇன்பம் இவளிடமே உண்டு. பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை       தன்நோய்க்குத், தானே மருந்து.       நோய்க்கு மருந்து வேறு;…

திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 110. குறிப்பு அறிதல் பார்வை, செயல்களால், காதலியின் ஆழ்மனக் குறிப்பினை அறிதல் (01-10 தலைவன் சொல்லியவை)   இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு       நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து. இவளிடம் இருபார்வைகள்; ஒன்று, நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து.   கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்       செம்பாகம் அன்று: பெரிது. காதலியின் கள்ளப் பார்வை, காதலில் பாதியைவிடப்…

திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல்     அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல்                    தகுதிமிகு தலைமகளது அழகு,                    தலைமகனது  மனத்தை  வருத்துதல்                                                           (01-10  தலைமகன்  சொல்லியவை)   அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை       மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு.        தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும்.   நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு       தானைக்கொண்(டு)…