திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து நோய்கள் வரும்முன் காக்கும், வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று, நிறையினும், குறையினும் நோயே. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து), அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு முழுதும் செரித்தபின் உண்டால். அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….
திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை. உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும் கள்காதல் கொண்(டு)ஒழுகு வார். கள்ளைக் காதலிப்பார் எப்போதும் அஞ்சப்படார்; புகழையும் இழப்பார். உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம் மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க. ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…
திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர். பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார், இன்சொல் இழுக்குத் தரும். அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும் பரத்தையின் இன்சொல் இழிவுதரும். பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர், நயன்தூக்கி, நள்ளா விடல். பெறுபயன் ஆய்ந்து பண்போடு பேசும், பரத்தையரை நெருங்காதே. பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…
திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள். அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க, இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார். மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல், நெருங்காமல் ஆய்ந்து பழகு. மன்னர் விழைய விழையாமை, மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை, நிலைக்கும் நன்மைகள் தரும். போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின், தேற்றுதல்…
திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை. 681. பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு. நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும், பண்பும், தூதர் இலக்கணம். அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு) இன்றி யமையாத மூன்று. அன்பும், அறிவும், சொல்ஆய்வுத் திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள் வென்றி வினைஉரைப்பான்…
திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 066. வினைத் தூய்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம் செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல் வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்; மற்றய எல்லாம் பிற. செயல்உறுதி என்பது மனஉறுதி; மற்றவை, எல்லாம் வேறு. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின் ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள். வரும்முன் காத்தலும், வந்தபின் தளராமையும் ஆய்வாளர் கொள்கை. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…
திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 068. வினை செயல் வகை தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள் சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு, தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக், காலம் தாழ்த்தாது, துணிந்துசெய். தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க, தூங்காது செய்யும் வினை. செயல்களைப் பொறுத்துக் காலம் தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…
திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம் குறைகள் இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம், வேண்டிய எல்லாம் தரும். நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்; நலச்செயல் எல்லாமும் தரும். என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை. புகழோடு, நன்மை தராச்செயலை, எப்போதும் விலக்கல் வேண்டும். ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னும் அவர். …
திருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை. நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம், யாநலத்(து) உள்ளதூஉம் அன்று. எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த வெல்திறன் பேச்சுத் திறனே. ஆக்கமும், கேடும், அதனால் வருதலால், காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு. வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத், தவறு இல்லாது பேசுக. கேட்டார்ப் பிணிக்கும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 057. வெருவந்த செய்யாமை
(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால், ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து. தக்கபடி ஆய்ந்து, குற்றம் மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க. கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம், நீங்காமை வேண்டு பவர். கடுமையாக மிரட்டி, மென்மையாகத் தண்டிப்பதே, ஆக்க நீதி. வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின், ஒருவந்தம்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 056. கொடுங்கோன்மை
(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 056. கொடுங்கோன்மை மக்களை அலைக்கழிக்கும், தீமையான, முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி. கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு), அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து. மக்களை வருத்தி, அலைக்கழிக்கும், ஆட்சி, கொலையினும் கொடிது. வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும், கோலொடு நின்றான் இரவு. வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக் கொள்ளை அடித்தலுக்குச், சமம். நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன், நாடொறும் நாடு கெடும். நாள்தோறும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 055. செங்கோன்மை
(அதிகாரம் 054. பொச்சாவாமை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 055. செங்கோன்மை மக்களது நலன்களைக் கருதியே, முறையோடு நடைபெறும் நல்ஆட்சி ஓர்ந்து,கண் ணோடா(து), இறைபுரிந்து, யார்மாட்டும், தேர்ந்து,செய்வ(து), அஃதே முறை. ஆராய்ந்த, இரக்கம் காட்டாத நடுநிலைத் தண்டனயே முறைஆம். வான்நோக்கி, வாழும் உல(கு)எல்லாம்; மன்னவன் கோல்நோக்கி, வாழும் குடி. உலகம் இன்மழையால் வாழும்; மக்கள், நல்ஆட்சியால் வாழ்வார். அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது, மன்னவன் கோல், …
