(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம்  068. வினை செயல் வகை

 தூய செயலை, மனஉறுதியுடன்

செய்தற்கு உரிய வழிமுறைகள்

 

  1. சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு,

     தாழ்ச்சியுள் தங்குதல் தீது.         

 

        ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக்,

        காலம் தாழ்த்தாது, துணிந்துசெய்.

 

  1. தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க,

     தூங்காது செய்யும் வினை.

 

        செயல்களைப் பொறுத்துக் காலம்

        தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க. 

 

  1. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,

     செல்லும்வாய் நோக்கிச் செயல்.

 

        முடிந்தபோது எல்லாம், செயல்நன்று;

        முடியாப்போது, முடிந்ததைச் செய்.

 

  1. வினை,பகை என்(று)இரண்டின் எச்சம், நினையும்கால்,

     தீஎச்சம் போலத் தெறும்.    

 

        மீதியான செயலும், பகையும்

        அணைக்கப்படாத் தீயைப் போன்றது.      

 

  1. பொருள்,கருவி, காலம், வினைஇடனோ(டு), ஐந்தும்,

     இருள்தீர எண்ணிச் செயல்.

                      

        பொருள், செயல், காலம், கருவி, இடம்

        ஐந்தையும் ஆழ்தாய்ந்து செய்.

 

  1. முடிவும், இடைஊறும், முற்றி,ஆங்(கு) எய்தும்

     படுபயனும், பார்த்துச் செயல்.    

 

        முடிவுகள், தடைகள், இறுதியில்

        பெறுபயன்கள் ஆராய்ந்து செய். 

 

  1. செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை

     உள்அறிவான் உள்ளம் கொளல்.

 

        செயலைத் தொடங்குவான், அச்செயல்

        வல்லார்தம் பட்டறிவைப் பெற்றுச்செய்.       

 

  1. வினையால் வினைஆக்கிக் கோடல், நனைகவுள்

     யானையால் யானையாத்(து) அற்று.

 

        யானையால் யானை பிடித்தல்போல்,

        செயல்முனைவார், வல்லாரால் முடிக்க.

 

  1. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே,

    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.       

 

        நண்பர்க்கு நல்லது செய்தலைவிடப்,

        பகைவரை நண்பர் ஆக்கு.

 

  1. உறைசிறியார், உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்,

     கொள்வர் பெரியார்ப் பணிந்து.    

 

       மக்கள்தம் நடுக்கம் ஒழிக்க,

       மெலியார், வலியாரிடம் பணிக.

 

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 069. தூது)