(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி)

kuralarusolurai_mun attai

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 093. கள் உண்ணாமை

நல்உணர்வு, உடல்நலம், செல்வம்

அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.    

  1. உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்

   கள்காதல் கொண்(டு)ஒழுகு வார்.

      கள்ளைக் காதலிப்பார் எப்போதும்

       அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.

 

  1. உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்

     எண்ணப் படவேண்டா தார்.

     கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம்

         மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க.  

 

  1. ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்

     சான்றோர் முகத்துக் களி?

     கள்குடியாரைத் தாயே வெறுப்பார்;

       உயர்ந்தாரிடத்தில், என்ன ஆவார்?      

 

  1. “நாண்என்னும் நல்லாள்” புறம்கொடுக்கும், கள்என்னும்

   பேணாப் பெரும்குற்றத் தார்க்கு.

      “நாணம்எனும் நல்லாள்” மதுக்குடிப்

       பெரும்குற்றத்தார் முன்னர் நில்லாள்.

 

  1. கைஅறி யாமை உடைத்தே, பொருள்கொடுத்து,

     மெய்அறி யாமை கொளல்.

      விலைதந்து, தம்நிலை மறப்பை

       வாங்கல், ஒழுக்கத்தை அறியாமை.

 

  1. துஞ்சினார் செத்தாரின் வே(று)அல்லர், எஞ்ஞான்றும்

     நஞ்(சு)உண்பார் கள்உண் பவர்.

      உறங்குவாரும், கள்என்னும் நஞ்சைக்

       குடிப்பாரும் செத்தார் போன்றாரே.

 

  1. உள்ஒற்றி, உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்

     கள்ஒற்றிக், கண்சாய் பவர்.

     குடித்தார் மனத்திலிருந்து வெளிப்படும்

       உளறல் கேட்டார் சிரிப்பார்.

 

  1. “களித்(து)அறியேன்” என்பது கைவிடுக, நெஞ்சத்(து)

     ஒளித்ததூஉம், ஆங்கே மிகும்.

      “குடிக்கவில்லை” என்னாதே; உள்ஒளித்ததை

உள்சென்ற கள்ளே வெளிக்காட்டும்.

 

  1. களித்தானைக் காரணம் காட்டுதல், கீழ்நீர்

     குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

     குடியரைத் திருத்தல், நீருக்குள்

       விழுந்தானை விளக்கால் தேடல்போல்.

 

  1. கள்உண்ணாப் போழ்தில், களித்தானைக் காணும்கால்,

     உள்ளான்கொல் உண்டதன் சோர்வு?

    குடிக்காப்போது, குடியின் இழிவைக்

     கண்டும், குடியர் சிந்தியாரோ?

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan

(அதிகாரம் 094.  சூது.)