(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1261-1270) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 128. குறிப்பறிவுறுத்தல் (குறிப்பால் உணர்த்துதல்) நீ மறைத்தாலும் கண்கள் உணர்த்தும் செய்தி உள்ளது. (1271) கண்நிறைந்த தலைவிக்குப் பெண்மை பேரழகு. (1272) மணிமாலையில் நூல்போல் தலைவியின் அழகில் குறிப்பு உள்ளது. (1273) பூ முகையில் மணம்போல் தலைவியின் புன்னகையில் காதல் மணம் உள்ளது. (1274) தலைவியின் கள்ளப்பார்வையில் துயர் தீர்க்கும் மருந்து உள்ளது. (1275) கலத்தல் தரும் பேரின்பம், அடுத்த பிரிவை உணர்த்துகிறது. (1276) தலைவனின் பிரிவை நம்மினும்…