(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை   அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல்,      பிறவினை எல்லாம் தரும்.   கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல்,        எல்லாத் தீமைகளையும் நல்கும்.   பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.          பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல்,        அறங்களுள் தலைமை அறம்.   ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…