பூம்புகார் அவலநிலை – க.தமிழமல்லன்

பூம்புகார் அவலநிலை 1975இல் தமிழக முதல்வராக இருந்த இலக்கியப்பேராசான் கலைஞர் தம் கற்பனை வளத்தால் சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற இலக்கியத்திற்கு உயர்வாழ்வு அளித்தார். சிலப்பதிகாரக் கதைக்காட்சிகளை நுட்பம் மிக்க சிற்பப் பலகைகளாக உருவாக்கினார். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடத்தைப் பூம்புகாரில்  கட்டி அதில் மக்கள் பார்த்து மகிழுமாறு பதிக்கச்செய்தார். அவற்றை ஒருமுறை பார்த்தாலே சிலப்பதிகாரத்தைப்  படித்த எண்ணம் நமக்குத் தோன்றும்.மிக அழகான கண்ணகி, மாதவி  சிலைகளையும் அங்கு நிறுவச் செய்தார். மக்கள் அவர்களை நேரில் பார்க்கும் தோற்றத்தையே அச்சிலைகள் உண்டாக்கும். ஏறத்தாழ 34 குறுக்கம் (ஏக்கர்)…

தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! –புதுச்சேரி அரசிற்கு வேண்டுகோள்

        கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு வேண்டுகோள்!         தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு: தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை. 2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை.  புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை.  கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை. 5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை. உரோமன் உரோலந்து…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி

பரிசு உரூ 1000.00 கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆவணி 04, 2049 /20.8.2018 கதைகள் சேரவேண்டிய முகவரி: முனைவர் க.தமிழமல்லன், தலைவர் தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி–9   போட்டிக்கான நெறிமுறைகள்: நான்கு பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை 2 படிகள் மட்டும் அனுப்புக. 2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின் பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ முத்திரையோ இருக்கக் கூடாது. 3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின் பெயரையும் இணைத்து அனுப்புக. 4.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச்…

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4 புதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர்  நெ.நடராசன் வரவேற்றுப்…

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை!

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக ! அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்! புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தீமைகள் பெரும்பான்மை மக்கள் மொழியான தமிழுக்கும் வரலாற்றுக்கும் விளைவிக்கப்பட்டுள்ளன. ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்காமல் பிரஞ்சு மொழியில் மட்டும் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைமாற்றித் தமிழில் மட்டும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். தேவைப்பட் டால் சிறிய அளவில் ஆங்கிலத்தில் இருக்குமாறு உருவாக்கலாம்….

திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி

திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி      புதுவைத் திருக்குறள் மன்றமும் தனித்தமிழ்இயக்கமும் இணைந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியைத் தட்டாஞ்சாவடி சமரசசன்மார்க்க சங்கத்தில் நடத்தின.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமைதாங்கிப் பேசினார். புதிமத்தின் தலைவர் சுந்தரஇலட்சுமிநாராயணன் முற்றோதலைத் தொடங்கி வைத்தார். அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் படிக்கப்பட்டன.   ஒருவர் சொல்ல மற்றவர் அதைத் தொடர்ந்து சொல்லித் திருக்குறள் படிக்கும் வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டனர். இராசாராம்,பாலசுந்தரம், கடலுார் பா.மொ.பாற்கரன், வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி, தமிழ்த்தென்றல், அரங்கநாதன், சமரசசுத்தசன்மார்க்க சாதனைச் சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி,…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7     “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…

புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்

புதுச்சேரி ஆளுநர்  தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்  ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது.  தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….

மொழிமானக் காவலர் தமிழமல்லன் – மு.பாலசுப்பிரமணியன்

  மொழிமானக் காவலர் தமிழமல்லன் தமிழுணர்வு குன்றாத தகையாளர் தன்மானம் நின்றோங்கும் நெறியாளர் உமியாக அயற்சொற்கள் கலப்பதையே உரக்க எதிர்க்கின்ற வீராளர் மல்லனுடை பாக்கள் என்றால் அனல்பறக்கும் நல்லொழுக்கம் கருத்துவளம் அணிவகுக்கும் கன்னலென தேன்பாக்கள் கரும்பினிக்கும் நன்னெறியில் பிறழ்வோரை சுட்டெரிக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் வீச்சிருக்கும் தென்னிலங்கை மண்பெருமை மூச்சிருக்கும் மண்மானம் மொழிமானம் காத்திருக்கும் எதுகையும் மோனையும் எழுந்துநிற்கும் எழுதென்று உவமையெலாம் ஏங்கிநிற்கும் தொடைவந்து தோள்சாய்ந்து காத்திருக்கும் தோதான இடம்கேட்டு பார்த்திருக்கும் படையெடுத்துச் சொல்லெலாம் படியிருக்கும் மடைதிறந்த வெள்ளம்போல் கவிசிறக்கும் பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர் பாடாற்றி…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 தொடர்ச்சி)   பெண்ணுக்கு ஒரு சிறு குறையிருந்தாலும் அதைப் பெரிதாக்கி அவளை மூலையில் முடங்க வைத்துவிடுவதும், ஆணுக்கு உடலளவிலும், மனத்தளவிலும் எவ்வளவு பெரிய குறை இருந்தாலும் அதை மூடி மறைத்து அவனுக்கு அழகிய இளமங்கையைத் திருமணம் செய்து கொடுத்து அவளது வாழ்வைப் பாழாக்குவதும். அதற்கு, “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்று விளக்கம் கூறுவதும் நம்மிடையே வேரூன்றியிருக்கும் கொடுமையான மூட மரபல்லவா? இதைத் தீர்க்கவேண்டுமென்று பாவலர் அறைகூவல் விடுகிறார். நாம்தான் திருந்த வேண்டும்.  மேற்கூறிய…

1 2 4