பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!

பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்! அடுத்தடுத்து இப்படியா ? ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ”  என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!…

சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா. சென்னை

  மார்கழி 23, 2048 ஞாயிறு சனவரி 07, 2018 சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை 600 033 சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு நிறைவுரை : வே.ஆனைமுத்து

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….

பெரியார் நோக்கில் திருக்குறள் – மு.இரத்தினம்

  பெரியார் நோக்கில் திருக்குறள் பெரியாரின் பெரும் பாராட்டைப் பெற்ற ஒரே நூல் திருக்குறள். தன் பாராட்டுக்கான காரணங்கள் பலவற்றை அவர் அடுக்குகிறார். அவற்றுள் சில: திருக்குறள் பாமரர்க்குப் புரிவது, அறிஞரும் ஏற்பது. வள்ளுவர்க்கு யாரும் ஞானப்பால் ஊட்டவில்லை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என வருணாசிரமத் தருமத்தை எதிர்க்கிறது. உயிர்ப்பலியிடும் வேள்வியை எதிர்க்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் அதிகம் இல்லை. ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது. மூடநம்பிக்கை இல்லை. மனிதச் சிந்தனைகளுக்கு எதிரான மத ஆதிக்கக் கருத்து இல்லை. ‘பிராமணன்’ என்ற சொல் கையாளப் படவில்லை. மேலும்,…

மா.பெ.பொ.கட்சியின் நாற்பெரு நிகழ்வுகள், சென்னை

தோழரீர் வணக்கம்! மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தை 09, 10, 2047 /  2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில் சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில் “சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2016” வெளியீடு தமிழ்வழிக் கல்வி – இந்தி ஆதிக்க எதிர்ப்பு, நீராண்மை – வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு, மது ஒழிப்பு மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒன்றுபட்டுப் போராடாமல் விடுதலை இல்லை. ஒன்றுபடுவோம் – போராடுவொம் – மாற்றுவோம் குடும்பத்தோடு வாருங்கள் ! திரளாக வாருங்கள்…

களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! – பாவலர் வையவன்

  தகப்பன் தாலாட்டு கண்ணுறங்கு கண்ணுறங்கு காவியமே கண்ணுறங்கு! களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! முன்னிருந்த தமிழர்நலம் மூத்தகுடி மொழியின்வளம் மண்ணுரிமை யாகஇங்கு மாறும்வரை கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) முப்பாட்டன் கடல்தாண்டி ஒர்குடையில் உலகாண்டான் இப்போது நமக்கென்று ஒர்நாடு இல்லையடி திக்கெட்டும் ஆண்டமொழி திக்கற்றுப் போனதடி இக்கட்டைப் போக்கணும்நீ இப்போது கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) தன்னலத்தில் தனையிழந்து தாய்மொழியின் புகழ்மறந்து பொன்னான தாய்நாட்டைப் போற்றிடவும் மறந்துவிட்டு இங்கிருக்கும் தமிழரெல்லாம் மையிருட்டில் வாழுகின்றார் ஈழமண்ணின் புதுவெளிச்சம் இங்குவரும் கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) ஆண்பிள்ளை வேண்டுமென்று…

“அந்தணர் என்போர்….” – புலவர்மணி இரா. இளங்குமரன்

   தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை. திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார். அரசர் ஒரு சாதி அன்று; வணிகர் ஒரு சாதி அன்று; வேளாளர் ஒரு சாதி அன்று; எவரும் அரசராகவோ, வணிகராகவோ வேளாளராகவோ ஆகலாம். அவ்வாறே, எவரும் அந்தணர் ஆகலாம். அது சாதிப் பெயர் அன்று என்பதன் சான்று இது. அந்தணர்…