உலகளாவிய இரு போட்டிகளுக்கு ஒவ்வோர் இலட்சம் உரூபாய்ப் பரிசு

ஒவ்வோர் இலட்சம் உரூபாய் இரு போட்டிகளுக்குப் பரிசு புதினம் 20 ஆவது ஆண்டில் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை மக்களிள் வாழ்வியல் பற்றிய உலகச் சிறுகதைப்போட்டி – பரிசுத்தொகை உரூபா நூறாயிரம் அமரர் சின்னத்தங்கம் இரத்தினம் நினைவாக, நெஞ்சைத்தொட்ட தாயின் நிலைையை எழுதுவோருக்கும் மொத்தப் பரிசு உரூபா நூறாயிரம். இரு போட்டிகளும் உலகளாவியது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், புதினம், 38, மொபட்டு சாலை, இலண்டன் [ Editor, PUTHINAM 38, Moffat Road, London, SW 17 7EZ UK…

சிரீஇராமகிருட்டிண விசயம் – சிறுகதைப் போட்டி

  சிரீஇராமகிருட்டிண மடத்தில் இருந்து வெளியாகும் சிரீஇராமகிருட்டிண விசயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ், சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   பகவான் சிரீஇராமகிருட்டிணர், அன்னை சிரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் வரலாறுகள், அவர்களது அறிவுரைகள் மற்றும் நமது சாத்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் சிரீஇராமகிருட்டிண விசயத்தில்…

“தென்றல்” சிறுகதைப் போட்டி

தென்றல் சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்காணுமாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு: $300 இரண்டாம் பரிசு: $200 மூன்றாம் பரிசு: $100 நகைச்சுவை, குமுகாயம், அலுவலகம், அறிவியல் என்று எதைப்பற்றியும் சிறுகதைகள் எழுதலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, ஈகம்(தியாகம்), கொல்லாமை போன்ற உயர்பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது. ஒருவர் 3 கதைகளுக்கு மிகாமல் அனுப்பலாம். உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் பங்குகொள்ள…