சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும்  தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு  மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு  உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.  

சுந்தரச் சிலேடைகள் 2. நிலவும் கங்கையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள்   சிலேடை 2.  நிலவும் கங்கையும் ஓடும் வளமாக்கும் ஓங்குமீசன் மேலிருக்கும் நாடும் குளிர்வாய் நலந்தரும் -தேடும் புலவரின் நாளமெல்லாம் பூத்துக் குலுங்கும் நிலவொடு கங்கை நிலைத்து. பொருள்: கங்கை மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு ஓடும். நிலத்தை வளமாக்கும். ஈசன் தலையில் இருக்கும். நாடு நீர்ச்செழிப்பத்தால் குளிர்ச்சி அடையும். எல்லா உயிர்க்கும் நலம் பயக்கும். புலவர்கள் பாடுமாறு அமையும். கங்கை பாயுமிடமெல்லாம் செடிகொடிகள் பூத்துக் குலுங்கும். நிலவு கிழக்கிருந்து மேற்காக ஓடும். ஈசன் தலைமேலிருக்கும். காதலர்களுக்கும் மலர்களுக்கும் வளந்தரும்….