செஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி

22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்?   இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை.   எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி…

செஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி

       (ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி) 20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம்     நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி

 18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு(Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி

  (புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி) 17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள்   வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி

   (புரட்டாசி 19, 2045 / 05 அக்தோபர் 2014 இன் தொடர்ச்சி) 16.  பொறாமைப்படத்தக்க இரு நிகழ்வுகள்   அன்றொரு ஞாயிற்றுக்கிழமை, சீன மக்கள் மீது ஆர்வமும் பொறாமையும் ஏற்படும் அளவிற்கு இரண்டு நிகழ்வுகள் கண்டேன்.   அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியாக எழுந்திருந்தேன். என் அறைக்கு ஒரு பெண், கையில் ஒரு பெட்டியுடன், நவநாகரிக உடையணிந்து கொண்டு வந்திருந்தார். பார்ப்பதற்கு, நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகள் போல் இருந்தாள். என்னைப் பார்த்ததும், “நீ ஃகௌ” (NI HAO…

செஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி

       (புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்”   சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…

செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி

       (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 14. போக்குவரத்துத் தீரச்யெல்கள்   சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு…

செஞ்சீனா சென்றுவந்தேன் 12 –பொறி.க.அருணபாரதி

(ஆவணி 15, 2045 /ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 12.        சியான் நகரின் ஆற்றில் நாகப்புள்(Dragons)!      பழங்காலக் கதை ஒன்றுடன் பிணைக்கப்பட்ட கட்டடங்களும், கலைச் சின்னங்களும் அனைத்து நாகரிகங்களிலும் இருக்கின்றன. சிலப்பதிகாரம் – தமிழர்களின் மரபுடன் இணைந்து வழங்கப்பட்ட அவ்வாறான இலக்கியமே! அதுபோலச் சீனாவிலும் பல இடங்கள் சீன இலக்கியங்களின் ஊடாக இன்றைக்கும் மதிக்கப்பட்டு வருகின்றன.      சியான் நகரின் மையப் பகுதியில் மணிக்கோபுரம் (Bell Tower) என்றொரு பகுதி உள்ளது. 1384ஆம் ஆண்டு மிங் மன்னராட்சியின் போது, இந்தக்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 11 – பொறி.க.அருணபாரதி

(ஆவணி 8, 2045 /ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 11. சியான் – தமிழ்நாடு – வரலாற்று உறவு     சங்கக் காலம் தொட்டே, சீனாவிற்கும் தமிழகத்திற்கும் உறவுகள் உண்டு. சீனாவிலிருந்து வந்த பயணிகள் சிலர் தமிழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் பண்பாடு – வரலாறு ஆகியவற்றைத் தங்களுடைய சீன மொழியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.   அவ்வாறு, தமிழகம் வந்த முதலாவது சீனப்பயணி பாகி யான் என்பவர், சீனாவின் நான் சிங் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டாவது வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு,…

செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 25, 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி)   8. கோலொச்சும் மனை வணிகமும் வாழ்விழந்த வேளாண்மையும் சோழிங்கநல்லூர் – சிறுஞ்சேரி – செம்மஞ்சேரி எனப் பல பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள சென்னையில், எப்படி மனை வணிகத் தொழில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதே போலவே தகவல் தொழில்நுட்ப நகரங்கள் குவிந்துள்ள சியான் நகரில் மனை வணிகத் தொழிலே கொடிகட்டிப் பறக்கிறது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகின்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கொரு புதிய வகை சீன மக்களை…

செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை   நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது!    பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…

செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி

    (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) 6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன?   சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன….