நண்பர்களே, நம் பாரதத் திருநாட்டின் விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள்.   எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015, இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட, கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.   மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா! உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா! நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,   பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்…