நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டி அருகே உள்ள தம்தம்(டம்டம்)பாறைப் பகுதியில் கடந்த அத்தோபர் மாதம் 27 ஆம்நாள் கனமழை பொழிந்ததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இயற்கையாக உருவான ஊற்றுகளால் மேலிருந்து மரங்கள் அடித்து வரப்பட்டு, தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைத்ததால் பல இடங்களில் சாலை போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் கொடைக்கானல் செல்லமுடியாமல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அல்லல்பட்டனர். இதனால் கொடைக்கானலுக்குச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பழனி, தாண்டிக்குடி வழியாகச் சென்றனர்.   தேனி, திண்டுக்கல் மாவட்ட…