அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது?  ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும்  உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர்.  அரியலூர் மாவட்டம் செந்துறை  அருகே  உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா? செய்தியும் சிந்தனையும் [செய்தி : கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று  திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய,  மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம்  இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன்,  தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு  அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்…

தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழில்லா அறமன்றம் யாருக்காக?   நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா?   தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள  அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே மு‌றையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே!  தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு  348(2) இன்படி, …

தமிழுக்காக வாதாடினால் சிறையா? வழக்குகளைத் திரும்பப் பெறுக! – திருமாவளவன்

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர்,  6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில்  வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு…

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என்று ஆத்திரேலிய பேரவை(செனட் சபை) உறுப்பினர் இலீ இரியன்னன் (Lee Rhiannon) தெரிவித்துள்ளார்.  நடைபெற்றுமுடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது சுட்டுரையில்(டுவிட்டரில்) இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். தேர்தலில் அடைந்த தோல்வியானது, மகிந்த மற்றும் அவரது உடன்பிறப்புகளை     ஃகேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில்…

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா?   காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487)   மன உரமாவது வேண்டுமல்லவா? “வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில் “சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித்…

தமிழர் வாக்குகள் இராசபக்சேவிற்கான தண்டனையே! – உருத்திரகுமாரன்

தமிழ் மக்களின் வாக்குகள் இராசபக்சவுக்கான தண்டனையே! சிறிசேனவுக்கோ ஒற்றையாட்சிக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரம் அல்ல!!  தலைமையாளர் உருத்திரகுமாரன் «நடந்து முடிந்த  இலங்கைத் தலைவர் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராசபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய  தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ  இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது  பொருள்தர முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க…

உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!

உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969) என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர். உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும்.    இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்    கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும்…

ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ

இராசபக்சேவை  இனப்படுகொலைக்  குற்றவாளியாக அறிவிக்க, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ           இலங்கை  அதிபர்  இராசபக்சேவை  இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய  ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத்தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றார்  மதிமுக பொதுச்செயலர் வைகோ.      புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம்  பின்வருமாறு கூறினார்:              மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக்கூட்டங்களை விட 22- ஆவது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக…

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: மத்திய அரசுக்கு செயலலிதா வற்புறுத்தல்

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத்தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்,  ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான  வாதுரைக்கு மறுமொழி அளித்து முதல்வர்  செயலலிதா பேசியது: “இலங்கைத் தமிழர்கள்  சிக்கல் பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொருத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில்  பன்னாட்டுப் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை…