இராசபக்சேவை  இனப்படுகொலைக்  குற்றவாளியாக அறிவிக்க, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ

 vaiko01

        இலங்கை  அதிபர்  இராசபக்சேவை  இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய  ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத்தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றார்  மதிமுக பொதுச்செயலர் வைகோ.

     புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம்  பின்வருமாறு கூறினார்:

             மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக்கூட்டங்களை விட 22- ஆவது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக அமைந்திருந்தது.  வருகிற 26 – ஆம்  நாள் உலகத்தமிழர்கள் அனைவரும் இனப்படுகொலை செய்த இராசபக்சேவைப் பன்னாட்டு நீதிமன்றக்கூண்டில் ஏற்றி  தமிழினத்தைப்படுகொலை செய்த குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்  என்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எடுத்துள்ள முடிவை ஆதரிக்க  வேண்டும்.

                     அப்பொழுது மாவட்டச்செயலர்  க. சந்திரசேகரன்  முதலானோர் உடனிருந்தனர்.

rajapakshe01