தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார். முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.  பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி…

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  வழியில் நற்றமிழ் பேணுவோம்!   படிக்கும் பருவத்திலிருந்தே தனித்தமிழ்நடை பேணியவர்; தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்ததுடன் – தனித்தமிழ் வித்தைப்பிறரிடம் விதைத்தவர்; தனித்தமிழ் அன்பர்களைத் தம் உறவாகவும் தனித்தமிழுக்கு எதிரானவர்களைத் தமக்குப் பகையாகவும் கருதி வாழ்ந்தவர்; தனித்தமிழ் வளர்ச்சிக்கெனவே இதழ்கள் நடத்தியவர்; அவர்தாம் தனித்தமிழ்க்காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவர் புகழுடல் எய்திய நாளில்(ஆவணி 18 / செட்டம்பர் 03) அவரது நினைவைப் போற்றும் நாம்  அவரது கனவுகளை நனவாக்க அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பின்வரும் முழக்கங்களைக் கடமைகளாகக்…