புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம்  21-25 வேறு படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும் கடியுடையத் தமிழகக் காவல ராகவும் வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம். இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும் அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங் கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம், வேறு கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங் கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே)….

இராவண காவியம்:பாயிரம்: புலவர், அரசர்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 11-15 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 16-20 16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும் பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம். புலவர் 17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய் துலக மின்புற வோதியுந் தாய்மொழிக் கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப் புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம். 18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும் யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல் காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம். வேறு…

இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம்   11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….

திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு – ந.சி.கந்தையா

திருக்குறளை மொழிபெயர்ப்பு என்பது பெருந்தவறு   சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த சாணக்கியர் (கௌடிலியர்) அருத்த சாத்திரம், காம சாத்திரம், தரும சாத்திரம், மோட்ச சாத்திரம், முதலிய பல நூல்களை வடமொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ்நாட்டினர் என்றும் அறிகின்றோம். சாணக்கியர் தமிழ்நாட்டில் அறியப்பட்டதும் வடநாட்டில் அறியப்படாததுமாகிய பொருள்களைப் பற்றிய நூல்களை இயற்றினமையால் அந்நூல்கள் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல்களுக்கு ஆதாரம் தமிழிலேயே இருந்திருத்தல் வேண்டுமென்பது வெளிப்படை. தமிழகத்தில் நூல்வழக்கிலோ செவிவழக்கிலோ உள்ள பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர்,…

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…

மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…

அரசியல் மந்திரம் கற்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அரசியல் மந்திரம் கற்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! அரசியல் மந்திரம் கற்போம்! தமிழகங் காக்கத் துடித்தெழுந்து, தரங்கெட்ட அரசியல் மாய்ப்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! விரைவினில் மாற்றம் காண்போம், மிகமிகும் மனதின் சீற்றங்களால், சுகம்மிகும் மாற்றம் காண்போம்! தவறென்று தெரிந்தும் திருந்தாத, துரியோ தனகுணத் தலைவர்களும், துச்சா தனகுணத் தடியர்களும், தமிழன்னை மடியில் கைவைத்து, துகிலினை உரித்துத் தெருவில் நிறுத்தி, தொடைதட்டிப் பங்கம் செய்யும் பொழுதும், தலைகுத்தி நின்றால் தாரணி பழிக்கும்! தமிழன்னை சாபம் நம்மை அழிக்கும்! தகதிமிதோம்! தகதிமிதோம்! தீந்தமிழ் நாட்டைக் காப்போம், நெருப்புடன் மோதும்…

முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே! -பேரா.சி.இலக்குவனார்

    உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் பழந்தமிழ்: பக்கம் 42

ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்

ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015  மாலை 5.00 சென்னை   ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை – சு.வித்தியானந்தன்

சங்கக் காலத்தில் ஆரிய நம்பிக்கை அன்றாட வாழ்வில் இடம்பெறவில்லை. சங்க காலத்திலே தமிழகத்தில் அந்தணரும், முனிவரும் வாழ்ந்தனரெனினும் அவர்கள் செல்வாக்குப் பிற்காலத்தில் இருந்த அளவுக்கு மேம்பட்டிருக்கவில்லையெனக் கூறலாம். சங்க நூல்களில் ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடுகளும் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் பொதுவாக நோக்குமிடத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை எனலாம். நகர வாழ்க்கையில் இவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக்கொண்டே வந்தது. பொதுமக்கள் தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளையே பின்பற்றினர். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்

திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்- ந.சி.கந்தையா

திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்   திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக விளங்குகின்றது. தமிழ் ‘ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். ‘நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந்தமிழும்…….போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது. – ந.சி.கந்தையா: தமிழகம்