வானளந்த புகழ் உடையாய் ! – ஐ.உலகநாதன்

வானளந்த புகழ் உடையாய்! வசையுரைத்த பழிவடக்கர்             வாயடக்கி நெரித்தவள் நீ திசைவென்ற மன்னவர்தம்             செங்கோலில் சிரித்தவள்நீ இசைநின்ற கல்லிலெல்லாம்             இன்பவலை விரித்தவள்நீ விசும்பிடையே நீலஉடை             விரும்பித் தரித்தவள் நீ பாரதத்தாய் மார்பகத்தில்             பாலாகாச் சுரப்பவள்நீ பணிந்தாரைப் பரிந்தணைக்கும்             பண்பாட்டில் இருப்பவள்நீ சீரறிந்த திருக்குறளில்             வேரறிந்து நிற்பவள் நீ தித்திக்கும் புத்தமுதாய்             எத்திக்கும் சிறப்பவள் நீ நீரறிந்த மிச்சத்தை             நெருப்பறிந்த எச்சத்தை நானறியத் தந்தவள்நீ             நாடறிய வந்தவள்நீ தேனளந்த கருப்பொருளே            …

எல்லாம் தமிழிலே! – செ.சீனிநைனா முகமது

எல்லாம் தமிழிலே! அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சி அன்பு பொழிந்தது தமிழிலே என் சின்னச் சின்ன இதழ்கள் அன்று சிந்திய மழலை தமிழிலே. நிலவு காட்டி அமுதம் ஊட்டிக் கதைகள் சொன்னது தமிழிலே அவள் புலமை காட்டி என்னைத் தாலாட்டி உறங்க வைத்தது தமிழிலே பிள்ளை என்று தந்தை சொல்லிப் பெருமை கொண்டது தமிழிலே நான் பள்ளிசென்றே அகரம் எழுதப் பழகிக் கொண்டது தமிழிலே. பருவம் வந்து காதல் வந்து பாட்டு வந்தது தமிழிலே அவள் உருவம் பார்த்தே உருகும் போதில் உவமை வந்தது…