இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் (தொடர்ச்சி) 6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந் தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத் தூய சங்கத் திருந்த தொழுதகு தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக் கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும் நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம். 9.கனைத்து…

இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5

(இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் 1.உலக மூமையா யுள்ளவக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 2.பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 3.கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 4.மூவர் மன்னர் முறையொடு…

தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்

தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது?   தமிழ்ச்சொற்களெல்லாம் தேம்பித்தேம்பி அழுகின்றன. சொற்களுக்கும் பொருள்களுக்கும் சோடிப்பொருத்தம் பார்த்துச் சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார். அவர் உருவாக்கிய கவிதைகளெல்லாமே காமதேனுக்கள்.   கேட்ட பொருளும் கேட்காத பொருளும் நினைக்கும் பொருளும் நினைக்காத பொருளும் வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக அவர் படைத்த கவிதைகள் வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் படிமச்சிற்பியின் படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே!   உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய ஆற்றலைக்கண்டு தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை. அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே இலக்கிய…

தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 1-5 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 6-10   மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! (6)   இன்னமு தாகிய என்னனே யேஉனை என்னித யாசன மேற்றினேன்-கன்னலின் செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட வந்தருள் செய்கவே வாழ்த்து. (7)   வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும் உன்னருளே தாராய் உவந்து. (8)   தமிழ்படித்த தாலிவர்கள்…

தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்

தமிழ்த்தாய் வணக்கம் 1-5   நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப் பலகாலந் தொட்டுப் பருவங் குலையா திலகுதமிழ்த் தாயே இனிது   என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர் இதழ்வாழும் தாயே இனிது   உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க ஆதித் தமிழே அழியாத தத்துவமே சோதிப் பொருளே துதி.   காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ் சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத் தெய்வ அருளும் திருவும்…

தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்

தமிழ்நலங் காக்க உறுதி மொழி –  நாரா. நாச்சியப்பன்   தான்வாழத் தமிழ்கற்றுக்     கொண்ட கேடன் தமிழ்வளர்ச்சிக் கிடையூறு    செய்கின் றானால் வான்மீதும் தமிழுணர    வேண்டு மானால் வண்மொழியைக் கற்கவரும்    யாவ ரையும் “நான்வாழ வகைசெய்யும்    நற்றா யேநின் நலத்திற்கோர் இடையூறு   வருங்கா லத்தில் நான்மாள நேர்ந்தாலும்   அஞ்சா துன்றன் நலங்காப்பேன்” என உறுதி   பகரச் செய்வீர்   -பாவலர் நாரா. நாச்சியப்பன்

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22   இருபத்தோராம் பாசுரம் மேம்பட்ட தமிழர் நாகரிகம் ஆதி உலகினில்பே ராட்சி நடத்தியவர்; யாதுமே ஊரென்றார்; யாவருமே கேளிரென்றார்; பூதலமே தாம்பெறினும் ஓர்பழி ஒவ்வாதார்; சாதலும் ஏற்பார் புகழ்கொள வையத்தில்! யாதினிய நாகரிகம், தீதிலாப் பண்பாடு! ஈதுணரும் நெஞ்சமில் லாராய்த் தமிழரிந்நாள் காதலே யின்றி இன,மொழிகா வாதிருக்கும் தீதினைச் சுட்டித் திருத்திடவா, எம்பாவாய் !   இருபத்திரண்டாம் பாசுரம் தமிழ்க்கடமைகள் பலப்பல செயவேண்டும் கத்துகடல்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20   பத்தொன்பதாம் பாசுரம்  தமிழ் கற்குமுன் அயல்மொழிகள் கற்க அயன்மொழிகள் கற்க அவாவுடையோர் கற்க, முயன்றே முழுதாக; முத்தமிழிற் போந்தால் , வியனோங்கு விண்ணளவு, வாரிதியின் ஆழம் பயன்தூக்கும் கற்பார் பிறமேற்செல் லாரே ! நயத்தக்க பேரிளமை நங்கையின்பாற் காதல் வயப்படுவார் மீளார்; மயங்கிடுவார் நாளும் ! கயலொத்த கண்பெற்ற காரிகையே ! தூங்கும் கயலிலையே! காதல்கொளக் கண்திறவாய், எம்பாவாய் !   இருபதாம்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18   பதினேழாம் பாசுரம் தமிழர் வீரக் குலத்தவர் தாழாது வாழ்ந்த தமிழ்க்குடி மாண்மறத்தால் வீழாத கூர்வேல், வாள் வெங்களத்து ஊடார்த்து வேழம், பரி, பகைவர் வீழ்த்திப் பொருதுயர்ந்தார்; ஏழை எனினுமொரு கோழையல்லா ஆண்குலத்தார், வாழாக் குழவியினை வாள்கீறி மண்புதைத்தார் ; ஆழி கடந்துநிலம் ஆணை செல,வென்றார்; பாழாய் உறங்குதியே! பாரோர்க் கிவையுணர்த்தக் கீழ்வான் சிவக்குமுனம் கீர்த்திசொல் எம்பாவாய்!   பதினெட்டாம் பாசுரம் நெஞ்சம் அஞ்சாத…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 பதினைந்தாம் பாசுரம் தமிழே பிற உயிரினங்களிலும் ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் ! தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் ! ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் ! மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் ! மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் ! நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் !   பதினாறாம் பாசுரம்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 பதின்மூன்றாம் பாசுரம் புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும் வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான் கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்! பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே; வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் ! தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ; வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ; கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்; கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் !   பதினான்காம் பாசுரம்…

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்   [‘மருவே செறித்த’ என்ற திருப்புகழ் மெட்டு தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற வண்ணம்]   தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன்…