செம்மொழி விருதுக் குழுவை நீக்கக் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை

சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும் தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா? செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா? புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு! சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக்…

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழிஆக்கிடு! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்மாற்றம் செய்திடு! வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுக! உயர்நீதிமன்றத்தில் உள்ள நடுவண் படையைத் திரும்பப் பெறு! சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் தை 21, 2047 / பிப்.04, 2016 வியாழன் மாலை 3 30 மணி அளவில்   உயர்நீதிமன்றத்தில் தமிழ் உரிமையை நிலைநாட்ட தமிழர்களே திரண்டு வாரீர்! அழைக்கிறது தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தமிழ்த் தேச மக்கள் கட்சி   தமிழ்மகன்…

மொழிப்போர் வீரவணக்கநாள், வள்ளலார்நகர்

இந்த ஆண்டு மொழிப்போர் ஈகியர் நாள் நிகழ்வுகள் பல ஊர்களில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது . சிறப்பு: தை 11, 2047 / 25 01 2016 திங்கள் காலை 9 மணிக்கு மூலக் கொத்தலத்தில் உள்ள மொழிப்போர் முதல் ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடம் நோக்கிப் பேரணி! ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு! தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு!- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அனைவரும் வாரீர் வாரீர் .