அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும்? என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே!  தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது…

“தமிழ்படிப்போம்” நூல் வெளியீட்டு விழா:

ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்ற “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா: புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைப் பிள்ளைகள் விரும்பும் வகையில் எளியமுறையில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா வைகாசி 30, 2045 /13-06-2014 அன்று ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்றது. விழாவிற்கு வாழ்நாட்பேராசிரியர் சண்முகதாசுஅவர்கள் தலைமை தாங்கினார். சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தொடக்கவுரைநிகழ்த்தினார். பேராசிரியர் சந்திரகாந்தன், பேராசிரியர்இ.பாலசுந்தரம், விரிவுரையாளரான திருமதி செல்வம் சிறிதாசு, கவிஞர் கந்தவனம்பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் திருமதி….