கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 5 & 6  அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில் ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி! புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும் புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்! சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின் தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர் நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய் நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5) சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்! தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத் தமதாக்கி முன்னிலையில்…

கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 –  தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 3 & 4  பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப் பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம் சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல் தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத் தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர் சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில் நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3) துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி, செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்! கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக் கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்;…

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர் அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ? குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ! கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா! திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத் திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா! இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்! இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1) காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும் கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத் தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத் தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று மேனிலையை…

தமிழே வாழ்க! – தாராபாரதி

தமிழே வாழ்க!  – தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க!   கவிஞர் தாராபாரதி