குரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா

ஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00 திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளிபுதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டைமுப்பெரு விழா மாணவ மாணவியர்க்குப் பாராட்டு‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா

ந.மணிமொழியன் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழா – படங்கள்.

உலகத்திருக்குறள் பேரவை சார்பில் அதன் பொதுச்செயலர் ந.மணிமொழியனின் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழாவை முன்னிட்டு ஐந்து நாள் திருக்குறள் திருவிழா  கடந்த திங்கள் நடைபெற்றது. நிறைவுநாளில் இலக்கியச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கவியரசு நற்பணிமன்றத்தலைவர் இரா.சொக்கலிங்கம் தொடக்கவுரை யாற்றினார். நகைச்சுவைப்  பேரரசர் முனைவர் கண.சிற்சபேசன் நடுவராக இருந்து தமிழ்இலக்கியம் அழகு விருந்தா? அறிவு மருந்தா?  என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  முனைவர் இரா.மோகன் பொன்.சந்திரசேகரன்,  கவிஞர் இரா.இரவி,  முனைவர  நிருமலா மோகன், ச.செந்தூரன், ச.திருநாவுக்கரசு ஆகியோர் வாதிட்டனர்.  கவிஞர் அசோக்குஇராசு நன்றி நவின்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட…

கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்

கரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது. கவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.