உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! – தஞ்சாவூரான்

உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்!   உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! எழவு வீட்டில் எதற்கு விழா?   நிலம் வெடிக்கும் போதெல்லாம் நெஞ்சு வெடிக்கும் உழவனை உங்களுக்குத் தெரியுமா?   மண்ணை நேசித்தவனை மரணத்தை யாசிக்க வைத்துவிட்டோம்   விடிய, விடிய அவன் உழுதது உங்களுக்காகத்தான் இன்று விடமருந்தி நிலம் விழுந்ததும் உங்களுக்காகத்தான்   இதுநாள் வரை உழவின் சிறப்பைக் கொண்டாடிய நாம் இன்று உழவனின் இறப்பைக் கொண்டாடத் தயாராகிவிட்டோம்   நீங்கள் பொங்கும் பொங்கலில் தளும்புவது அரிசியல்ல… ஒரு ஏழை விவசாயியின்…

திருக்குறளே தேசியநூல் – தமிழ்ச்சேய் தஞ்சாவூரான்

  குறள்… அன்பின், அறம்பாடியது   மறம்பாடியது ஆனால், எந்தமதத்தைப்பற்றியும் புறம்பாடவில்லை! ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… வாழ, பொருள்செய்யும்வழிதந்தது வாழ்க்கை, பொருள்படநெறிதந்தது ஒருக்காலும் வாழ்வில், மருள்படரவரிதந்ததில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… காதலின், இன்பம் சொன்னது காத்திருக்கும், துன்பம்சொன்னது கிஞ்சித்தும் காமம்தூண்டி, வன்மம்சொன்னதில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! தஞ்சாவூரான் துபை. ஐக்கிய அரபு அமீரகம் +971 55 79 88 477