(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் தென்பாலி 16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே,   பெருவளம் தென்பாலி 17.குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன் பது நாடே. 18.கொல்லம் தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள…