தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா!

நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம். தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது.   தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி…

கல்வெட்டில் முதல்திருக்குறள்

  சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.   2047 ஆனி 19  / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார்.   திருக்குறளை  நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல்,…

ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சி தொடக்கவிழா

  அன்புடையீர், வணக்கம். உலகத் தமிழரின் உறவுப் பாலமாய் வெளிவரும் ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாய் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நேரம்: மாலை 6மணி  இடம்: இலண்டன் தொகுப்பறை, ஐஎல்இசி மாநாட்டு மையம், 47, (இ லில்லி சாலை, இலண்டன் [London suite, ILEC Conference Centre, 47, Lillie road, London, SW6 1UD] விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி விருந்துடன் நிறைவுறும்….

புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் 200 ஆம் ஆண்டுத் தொடக்க விழா

தமிழகத்தில் தமிழில் மிக மிக மிகுதியான பாடல்களை இயற்றிவர் எனும் பெருமை உடையவர் சிலரில் ஒருவர், உ வே சா அவர்களின் குருவாக விளங்கியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பல தல புராணங்கள் பற்பல பிரபந்த வகைகள் ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் சீட்டுக்கவிகள் என பன்னூராயிரம் பாடல்களை இயற்றியவர் எனலாம் அவர்தம் 200 ஆம் ஆண்டு தொடக்க விழா.சென்னை பல்கலைக்கழகம் ஏற்று நடத்தியது. சென்னை கடற்கரை ஓரம் அமைந்த தமிழ்த்துறை சார்ந்த அரங்கில் வைகாசி…