த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா

‘வெல்லும் துாயதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி – தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் மணிவிழாவைக் க.ப.அறவாணர் நடத்தி வைத்தார். முனைவர் தாயம்மாள் அறவாணர் வாழ்த்துரை வழங்கினார். இசைஞர் முருகேச கந்தசாமி வாழ்த்துப்பா பாடினார். த.தமிழ்நேயன், ச.கலைமதி ,செனித் இனியா ஆகியோர் தமிழ் உணர்வுப் பாடல்களைப் பாடினர். முன்னதாக அனைவரையும் ஆசிரியை த.தமிழ்க் கொடி வரவேற்றுப் பேசினார். இம்மணிவிழா குயவர்பாளையம் மகிழ்ச்சி(போன்சிழார்) உணவகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் தமிழ்ச்செல்வி முனைவர் க.தமிழமல்லன் இணையரை வாழ்த்தினார்.

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…