உலக வாழ்த்து – நாமக்கல் கவிஞர்

உலக வாழ்த்து   வாழ்க வாழ்க உலகம் எலாம் வாழ்க எங்கள் தேசமும் வாழ்க எங்கள் தமிழகம் வாழ்க எங்கள் மனை அறம் வாழ்க மேழிச் செல்வமே வளர்க நாட்டுக் கைத்தொழில் வாழ்க எங்கள் வாணிபம் வாழ்க நல்ல அரசியல் அன்பு கொண்டு அனைவரும் அச்சம் இன்றி வாழ்கவே துன்பம் ஏதும் இன்றியே துக்கம் யாவும் நீங்கியே இன்பமான யாவும் எய்தி இந்த நாட்டில் யாவரும் தெம்பினோடு தெளிவு பெற்றுத் தேவர் போற்ற வாழ்குவோம்! – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்

திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல்   உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள…