ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!    ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.   இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று…

எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு

  கிளிநொச்சி  சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு  இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான  எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி  முதலியன அன்பளிப்பு.    கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம்  பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல  இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும்…

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர். இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது. கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர். தரவு : முதுவை இதாயத்து