ஆரியர் வருகையால் கட்டுக்கதைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் பெருகின! – இராகவன்

  ஆரியர் வருகையால் பாரத நாட்டில் சமயச்சடங்குகள் வளர்ந்தன. தெய்வங்கள் பெருகின. புரோகிதம் வளர்ந்தது. சாத்திரங்களும், சடங்குகளும் மலிந்தன. அதனால் கலைகளும் கட்டுக்கதைகளும் வளர்ந்தன. குருட்டுப் பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சாதிகளும், சாதிக் கட்டுப்பாடுகளும் பயனற்ற மந்திர தந்திரங்களும் பெருகின. தெய்வங்களும் அவற்றின் மனைவி மக்களும், சிறு தெய்வங்களும் பெரிய தெய்வங்களும் அவற்றின் பணியாட்களுமாக ஆயிரம் ஆயிரமாகத் தெய்வங்கள் பல்கிப் பெருக்கெடுத்தன. முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களின் மனைவிமக்கள் பணியாட்களுமாகக் கோடானு கோடி தெய்வங்கள் பல்கிப் பெருகின. -நுண்கலைச் செல்வர் இராகவன்: தமிழ் சங்கக் கலைத்…

முற்காலத் தமிழர்கள், ஆயிரக்கணக்கான கல்தொலைவில் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர்

முற்காலத் தமிழர்கள், ஆயிரக்கணக்கான கல்தொலைவில் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர் –  நுண்கலைச் செல்வர் இராகவன் நுண்ணறிவும், திறனும், உறுதியான உள்ளமும் வாய்ந்த முற்காலத் தமிழர்கள் கலங்கள் கட்டி ஆயிரக்கணக்கான கல்தொலைவிற்கு அப்பாலுள்ள தீவுகளுக்கெல்லாம் போந்து தம் வணிகப்பண்டங்களை அங்கு விற்று அஃதாவது பண்டமாற்றுச் செய்து வந்தனர். ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகப் புகழ்ந்து கூறப்பெறும் மணி மேகலையில் சாவ நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கள் நிகழ்ந்து…