கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? :  தி.க.உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? :  தி.க.உறங்குவது ஏன்?     கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாளர்களா  அல்லரா என்பதை மக்கள் அறிவார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது.  நேர்மையாக வாழும்    ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், “நான் படித்தவன், நேர்மையாகத்தான் வாழ்வேன்”…

இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார்? – சொ.வினைதீர்த்தான்

  தொண்டரடிப்பொடியாழ்வார் இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார் என்று அற்புதமாகப் பின்வரும் பாசுரத்தில் பதிவுசெய்து  இறைப்பற்றின் நோக்கத்தை அழகுற உணர்த்திவிடுகிறார். “மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.” மனத்தூய்மை வாய்மையால் காணப்படுமென்றது வள்ளுவம். மனத்தினில் தூய்மையில்லாமல் “நமநம” என்று பேசுவதாலும், தலங்கள்தோறும் அலைவதாலும், புறச்சின்னங்களாலும் அரங்கனின் அருள் கிடைத்துவிடாது. கள்ளநெஞ்சத்திற்குப்  பற்று – பக்தி – வசப்படாது…