(தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 தொடர்ச்சி) தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள்  2/2 தொல்காப்பியர் கூறும் இல்லறப்பயன்      காமஞ்சான்ற கடைக் கோட் காலை ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல் – கற்பியல் – 1138)         காமம்  நிறைந்த உறுதியான காலத்தில் நலம்சிறந்த மக்களோடு சுற்றமொடு கூடி இல்லறம் புரிந்து சுற்றமொடு தலைவனும் தலைவியும் விருந்தோம்பலை இடையறாது செய்து வாழ்தலே கற்பின் பயன்  என்று முனைவர் வ.சுப. மாணிக்கம்…