தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் கடன் அட்டை முதலான   பணப்பொறி அட்டைகளின்  எண்களைத் தெரிந்து கொண்டு தொடர்புடையவர்களிடம்   மேலாளர் பேசுகிறேன் எனக்கூறி இரண்டாண்டுக்கு மேலானதால்   பணப்பொறியட்டை செயலிழந்து விட்டது என்றும் கடவுச்சொல்லை மாற்றினால் அதை நீக்கிச் செயல்பட வைக்கலாம் என்றும் கூறி கடவுச்சொல்லைப் பெற்றுப் பணத்தை எடுத்துவிடுகின்றனர்.   இதற்காக 9600367557 என்ற எண்ணில் இருந்து அழைக்கின்றனர்.அதன்பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தி மற்றும் மலையாளம் கலந்த மொழியில் பேசுகின்றனர்….