கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு

கீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30

புரட்டாசி 19, 2050 / 7.10.2019 காலை 9.00-9.30 கீழடி குறித்து உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன்  நெறியாளர் திரு பாண்டியன் தமிழன் குரல் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி

பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்

பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன்   பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்” எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின்…

மாமூலனார் பாடல்கள் – 12 : சி.இலக்குவனார்

     கஉ. “ஆண்டு அமைதியாகத் தங்கி இரார்”  – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (மார்ச்சு, 16, 2014 இதழ்த் தொடர்ச்சி) அகநானூறு  201  –  பாலை  அம்ம! வாழி தோழி! பொன்னின்  அவிர் எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை  வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன்  புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை  அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து  தழையணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்  பழையர் மகளிர் பனித்துறை பரவப்  பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை…