தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் பாம்புகள் நடனமாடுவதைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. தோப்பில் தென்னை, சப்போட்டா போன்ற மரங்களை வைத்து வேளாண்தொழில்புரிந்து வருகிறார். இவரது தோப்பில் ஏராளமான கரையான் புற்றுகள் உள்ளன. இப்புற்றுகளில் பாம்புகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இவருடைய தோப்பில் அடிக்கடி மயில்களுக்கும் பாம்புகளுக்கும் சண்டை நடப்பதும் அதனைப் பொதுமக்கள் கண்டு களிப்பதும் வாடிக்கை.   இந்நிலையில் நேற்று மாலை நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் ஒன்றுடன் ஒன்று…