பாரதியைப் போற்றுநாடே!  பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்த முன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே! மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே! மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே! தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே!   – மாம்பலம் ஆ.சந்திரசேகர், எழுத்தாளர்