கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30   இருபத்தொன்பதாம் பாசுரம் இளையாரையே இனிப் பயிற்றுவோம்! யாமும் பலவாற்றான் நல்லுரைகள் ஓதிநின்றோம்! தாமும் செவியுள் தமிழினத்தார் போட்டுவைத்தே ஆமாம் எனப்பகன்றார்; ஆயின்வழி ஏற்பாரோ? மீமிசை மீமிசை யாமுரையோம் அன்னவர்க்கே ! நீம மிகுவெழில் நன்முகச் சிற்றகவைத் தூமனத்து நன்னிலத்தில் தூவிடுவோம் நற்றமிழை! பூமி விதந்தேத்தப் பொற்புதல்வர் செய்வார்காண்! மேன்மை தமிழினம் பூணுமடி, எம்பாவாய் !   முப்பதாம் பாசுரம் இல்லமும் நாடும் ஓங்குக!…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 தொடர்ச்சி)    திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28   இருபத்தேழாம் பாசுரம் தமிழரை ஒன்றுபடுத்த வணங்கவேண்டும்! ஏடி, தமிழினத்தை ஏந்தவந்த பெண்கிளியே! நாடிநம் மக்களின் இற்றைநிலை கேளாயோ ! கூடி முழங்கிவிட்டு ஊன்கழிந் தோய்ந்திடுவார் ! பாடு படுவார்; பிறவினத்தார் தாள்பணிவார் ! மூட வழியேற்றே முன்னேற்ற வாழ்விழப்பார் ! பீடுநிறை தங்குலத்துப் பேர்புகழைத் தாம்காவார்! சாடா தவர்நெஞ்சத் தாள்திறந்தே, தம்முள்ளே கூடிப் பணியாற்றக் கும்பிடவா , எம்பாவாய் !  …

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 இருபத்தைந்தாம் பாசுரம் சான்றோர் ஏத்தும் வழி   முகிற்கவசக் குன்றம் மருளும் கரிமேற் பகைசாய்க்கும் வேந்தன் தான்தனித்தே வெல்லும் மிகுபோர்போல் அன்றே குடிபல்லோர் ஓம்பல் ! வகுக்கும் அரசாணை வன்சான்றோர் ஏத்தும் தகவாய்ப் புரிதலன்றித் தாழ்நிலை சாரான் ! மிகவே அறநூல் மொழிகளயும் மீறான் ! உகுநீர் குடிகாணா ஓங்குபுகழ் ஆட்சி இகமும் வழுவா வகைசெயவா, எம்பாவாய் !   இருபத்தாறாம் பாசுரம்  தமிழால்…