புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும்…

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎