தோழர் தியாகு எழுதுகிறார் 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 5 பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும் பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்: “புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.” [கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர்,…

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா?  உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை!  உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள்  சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது.   இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி   நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும்  உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் – கா.பொ.இரத்தினம்

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் “கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுகள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் “உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது. யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான். -தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்

பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும் – அ.கி.பரந்தாமன்

பண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும்   தமிழர்கள் ஏன் பிற மக்களும் பண்பாட்டை அடைய வேண்டுமானால், பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் ஒப்புயர்வற்ற அருந்தமிழ் மறையாகிய திருக்குறளைப் பயில வேண்டும். வள்ளுவர் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கியவர் என்பதை அவரது திருக்குறளால் நன்குணரலாம். அவர் இளமை தொட்டே கருத்து வளம் மிக்க நூல்கள் பல பயின்று, அறமனப்பான்மையுடன் குடும்பத்தோடு வாழ்ந்து, குழந்தைகள் மீதும் தாயின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மீதும் தணியாத அன்பு கொண்டு, நாம் வாழ, நல்லுலகம் வாழ, நமது…

தமிழகத்தில் புரட்சி நடத்த வேண்டிய கட்டாயம் : திருச்சியில் கருணாநிதி பேச்சு

 ”ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது,” என, திருச்சியில் நடந்த தேர்தல் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.  தி.மு.க., வேட்பாளர்கள் அன்பழகன் (திருச்சி), சின்னசாமி (கரூர்), சீமானூர் பிரபு (பெரம்பலூர்) ஆகியோரை ஆதரித்து, அவர் பேசியதாவது: “அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நீங்கள் கனவு கண்ட ஆட்சி வந்தது. அந்த ஆட்சி, சாதாரண மக்கள் வாங்கிப் புசிக்கின்ற விலைவாசியில் தான் கை வைத்தது. எது உயர்ந்தாலும், உயராவிட்டாலும் விலைவாசி…