ஐயோ தமிழுக்கு ஆபத்து! – சுப.வீரபாண்டியன்

ஐயோ தமிழுக்கு ஆபத்து! ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும். அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் நிலை அது அன்று. தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்காமலேயே பட்ட மேற்படிப்பை முடித்திட முடியும் என்ற அவல நிலை இந்த…

இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா?   இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த  பொழுது –  திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.   இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது  முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து…

இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை

  தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை.   இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…