புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்

புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தமிழீழச் செயற்பாட்டாளரும் திரைப்படப்பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் (புரட்டாசி 20, 1966 /06.10.1935 – ஆவணி 23, 2052 / 08.09.2021)இன்று மீளாத்துயில் கொண்டார். கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் உயர்மிகு கருப்பண்ணன் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தவர்  இராமசாமி. ஒருமுறை இந்தி ஆசிரியர் ஒருவர், இவரைப் பைத்தியக்காரன் என விளையாட்டாகக் கூற, “ஆம்.நான் பைத்தியக்காரன்தான். தமிழ்மீது பைத்தியம் கொண்டவன்” எனச்சொல்லித் தன் பெயரைப் புலமைப்பித்தன் என மாற்றிக்கொண்டவர். பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின்னர் கோவை, சூலூரில்…

60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ கவியரங்கம்

60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது‘ கவியரங்கம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னையில் 60 கவிஞர்கள் கூடும் கவியரங்கம் நடைபெற உள்ளது.     புலவர் புலமைப்பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை (மெரீனா) கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பின்புறம் நடைபெற உள்ளது.   கிறித்து பிறப்பிற்கு முந்தைய நாளான 24 அன்று கிறித்துமசு மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று…