துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்   விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன்                 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது.                  அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு  இன்றியமையாமையாதது  என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர்.       அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும்  உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம்.  உலகம் சார்ந்தது: அகச்சான்று:                 சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…