மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! –  தி.வே.விசயலட்சுமி

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19   தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்             வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்             கற்றான் கருதிச் சொல்’ 40 ‘           உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று             அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர். இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது. கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர். தரவு : முதுவை இதாயத்து