மெய்வல்லுநர் போட்டி 2014

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…

தென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2014

  தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தென்மார்க்கில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாலதி தமிழ்க்கலைகூடம் தமிழ் மொழியைக் கற்பித்துவருகிறது. வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிக்கான புலன்மொழி வளத்தேர்வு 01-06-2014 அன்றும் எழுத்துத் தேர்வு 07-06-2014 அன்றும் தென்மார்க்கின் பல பகுதிகளிள் நடைபெற்றது.   இத்தேர்வு தென்மார்க்கிலுள்ள 16 தேர்வுநிலையங்களில் நடைபெற்றது. இத்தமிழ்மொழித் தேர்வுக்கு 900 மேற்பட்ட மாணவர்கள் தோற்றினார்கள். இவர்கள் யாவரும் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதினார்கள்.