பெருந்தலைச் சாத்தனார்: 2 : ந. சஞ்சீவி

பெருந்தலைச் சாத்தனார்: 2 : ந. சஞ்சீவி (பெருந்தலைச் சாத்தனார் 1  : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 20 3. பெருந்தலைச் சாத்தனார்(தொடர்ச்சி) அந்நாளில் பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் தம் கலைத்திறனால் தமிழகத்தை இசையும் கூத்தும், பண்ணும் பாட்டும் நிறைந்த கலைக்கோயிலாய்த் திகழும் வண்ணம் செய்தனர். அவர்கள் வாழ்வு துன்பம் கண்டிலது. அவர்கள் கையிலும் கருத்திலும், நாவிலும் நெஞ்சிலும் கலையரசியின் களி கடமே சிறந்து விளங்கியது. கலை வளர்த்த அச்செல்வர்கள் வீட்டிலும் வாழ்விலும் இன்ப நடனம் இடையறாது நிகழும்…

பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி

பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி (சங்கக்காலச் சான்றோர்கள் 18:  : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 19 3. பெருந்தலைச் சாத்தனார் ‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி’ நடக்கும் காவிரித்தாயின் கருணை வளம் கொழிக்கும் சோழ நன்னாட்டிலுள்ள பழமை பொருந்திய ஊர்களுள் ஒன்று ஆவூர். அவ்வூரின்கண்  மூலங்கிழார் என்ற பெயர் படைத்த சங்கச் சான்றோர் ஒருவர் இசைபட வாழ்ந்திருந்தார். தமிழகம் எங்கணும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு அருந்தவப் பயனாய்த் தோன்றினார் ஓர் அருந்தமிழ்ச்…